நாளை தேர்தல்; 63 ஆயிரம் மக்கள் வாக்களிக்கத் தயார்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நாளை 11ம் திகதி நடைபெறவுள்ளதுடன், இந்த தேர்தலில் 53,384 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

17 தேர்தல் தொகுதிகளில், 47 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட 5 அரசியல் கட்சிகளில் இருந்து 155 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், அவர்களில் 28 பேர் எல்பிட்டிய பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர்.

வாக்கெண்ணும் பணிகள் வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறவுள்ளதுடன், எல்பிட்டிய தொழிற்பயிற்சி அதிகார சபையில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தின் ஊடாக இறுதி முடிவு வௌியிடப்படவுள்ளது.

No comments