வாக்களிப்பிற்கு தயார்?
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தபால் மூல வாக்குச் சீட்டுகளை உறுதிப்படுத்தும் செயற்பாடுகள் இன்று (15) இடம்பெற்றதுடன் தபால் மூல வாக்குச் சீட்டுகளை வெளியிடுதல் மற்றும் அவற்றை தபால் மூலம் அனுப்பி வைப்பதற்காக கையளிக்கும் பணிகள் எதிர்வரும் 18 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அரச நிறுவன ஊழியர்கள் மற்றும் இராணுவத்தினர் ஆகியோருக்கு தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் எதிர்வரும் 31 ஆம் திகதியும் மறுதினமும் வழங்கப்பட்டுள்ளது.
இத்தினங்களில் வாக்களிக்க தவறுவோருக்கு எதிர்வரும் 7 ஆம் திகதி அந்தந்த மாவட்ட செயலகங்களில் வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது
Post a Comment