வரணியில் குளத்தில் மூழ்கி இளைஞன் பலி!

தென்மராட்சி - வரணி, இடைக்குறிச்சிப் பகுதியில் நேற்று (25) குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

வலிப்பு நோயாளியான குறித்த இளைஞர் நேற்று மாலை குளப்பகுதியில் நின்றிருந்த போது வலிப்பு ஏற்பட்டு உறுண்டு சென்று குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது 34 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். தற்போது அவரது சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments