கோர விபத்தில் ஒருவர் பலி!

ஆனையிறவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்தோடு இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று (02) அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த இரண்டு டிப்பர்களுடன் கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி பயணித்த ஹையேஸ் ரக வான் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் வானின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்தோடு லொறியின் சாரதி மற்றும் வானில் பயணித்த நபரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments