நள்ளிரவில் கோர விபத்து; காரதீவுப் பெண் பலி!

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்தும் கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வந்த அரச போக்குவரத்து பேரூந்தும் மின்னேரியா பகுதியில்  நேருக்கு நேர் மோதி  கோர விபத்து நள்ளிரவில் ஏற்பட்டுள்ளது.

இதில்  காரைதீவு பகுதியை சேர்ந்த ஒரு பெண் உயிர் இழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது, ஆனால் விபத்து மிகவும் அகோரமாக நடந்திருந்தால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என எதிர்பாக்கப்படுகிறது.

No comments