அடித்தது அதிஸ்டம்: கம்பெரலியவில் நிவாரணம்!


தமிழீழக்கேட்டு போராடிய கூட்டமைப்பிற்கு மிஞ்சிய கம்பெரலிய திட்டத்தை போல புதிய திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.இதன் பிரகாரம் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும்; 100 மில்லியன் ரூபாவிற்கான உதவித்திட்டங்களை வழங்கலாம்.

கம்பெரலிய போல கோவில், தேவாலயங்களிற்கு நிதியளிக்காமல், இதில் வாழ்வாதார உதவிகளை பாதிக்கப்பட்டவர்களிற்கு வழங்க ஏற்பாடு செய்யப்படுமென நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளாராம்.

கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட பேச்சுக்களின் அடிப்படையில் இக்கோரிக்கையினை ஏற்று மங்கள சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி
குறித்த சலுகை வழங்கப்படவுள்ளது

No comments