சஜித் பின்னாலே கூட்டமைப்பு?

தேர்தல் அறிவிப்பு எப்போதும் வெளியாகலாமென்ற எதிர்பார்ப்பின் மத்தியில் அரச வளங்களை எவரையும் முன்னிலைப்படுத்த பயன்படுத்த வேண்டாமென தேர்தல் திணைக்களம் அவசர அவசரமாக அறிவித்துள்ளது.

இதனிடையே அடுத்த ஜனாதிபதி தொடர்பில் வேட்பாளர்களுடன் பேசப்போவதாக சுமந்திரன் அறிவித்துள்ளநிலையில் பொக்கணைக் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை கையளிப்பதற்காக வீடமைப்பு மந்திரி சஜித் பிரேமதாசா இன்று வருகை தந்திருந்தநிலையில் கூட்டமைப்பு அவருடன் ஒட்டியோடி தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் வலிகாமம் கிழக்கிற்கு வருகை தந்திருந்த சஜித் பிரேமதாசாவை வரவேற்க எம்.ஏ.சுமந்திரன் ,சித்தார்த்தன் முதல் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் என அனைவரும் முண்டியடித்து நின்றிருந்தனர்.

இதன் மூலம் கூட்டமைப்பின் நிலைப்பாடு இத்தேர்தலில் வெளிப்படையாகியுள்ளது.

No comments