பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஊடகம்:கடும் கண்டனம் ?


சிறிலங்காவின் அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி நிறுவனத்தை, நேற்று நள்ளிரவில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தன்வசமுள்ள பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ், கொண்டு வந்துள்ளமைக்கு ஊடக அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

முன்னர் ஊடகத்துறை அமைச்சின் கட்டுப்பாட்டில் இருந்த ரூபவாஹினி கூட்டுத்தாபனம், நேற்று நள்ளிரவில் இருந்து பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவதாக, சிறிலங்கா அதிபர் நேற்றிரவு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எந்த நேரத்திலும் அதிபர் தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் நேற்று நள்ளிரவு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மைத்திரியின் இந்நடவடிக்கைக்கே சுதந்திர ஊடக இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் தமது கடுமையான எதிர்ப்பினை இன்று வெளியிட்டுள்ளன.

No comments