யாழில் பரபரப்பு; மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி

சுகாதாரத் தொண்டர் நியமனத்தை மீள் பரிசீலணை செய்யக் கோரி நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட தொண்டர்கள் இன்று (05) சற்றுமுன் சாவகச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நியமனம் வழங்கும் பிரதான  மண்டபம் அருகில் இடம்பெற்ற இப் போராட்டத்தில் போராட்டக்காரர்களை சந்தித்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த சேனாதிராஜா, "அவர்கள் பல குறைகளை குறிப்பிட்டனர். தகுதியற்றவர்களுக்கு நியமனம் வழங்கப்படுவதாக தெரிவித்தனர். இது தொடர்பில் ஆளுநரிடம் பேச எனக்கு அவகாசம் தர வேண்டும். அதுவரை பாதையை தடை செய்ய வேண்டாம் என அவர்களிடம் தெரிவித்தேன்" என்றார்.

இதேவேளை, போராட்டத்தின் போது சுகாதாரத் தொண்டர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

No comments