குடும்பச் சண்டையால் ஒருவர் கொலை!

பேலியகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துட்டகைமுனு மாவத்தையில் உள்ள வீடு ஒன்றில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் பேலியகொட பகுதியை சேர்ந்த 31 வயதுடைய பிடிதுவகமகே ஷாந்த குமார என்பவராவார்.

குடும்ப தகராறே இந்த கொலைக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

No comments