மகேந்திரனுக்கு ஆப்படிக்க ஆவணங்களில் சிறிசேன கையெழுத்திட்டார்.

பிணை முறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தக் கோரும் ஆவணங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்.

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த தேவையான 21 ஆயிரம் பக்கங்களை கொண்ட சட்டமா அதிபரின் ஆவணத்தை எதிர்வரும் தினத்தில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் வெளிவிவகார அமைச்சு ஒப்படைக்க உள்ளது.

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பிலான கோரிக்கையுடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் ஜனாதிபதி காரியாலயத்தில் வைத்து ஜனாதிபதியின் பார்வைக்கு உட்படுத்தப்பட்டதுடன் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி குறித்த ஆவணங்களில் இன்று கையெழுத்திட்டுள்ளார்.

No comments