குளவித் தாக்குதலில் 55 பேர் காயம்!

ஹட்டன்-பொகவந்தலாவை பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் மீது குளவி கொட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

அதில் 55 பெண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லின்போட் மற்றும் கெக்கஸ்வோல் தோட்டங்களில்  இன்று காலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கானதாக கூறப்பட்டுள்ளது.

No comments