ஜேவிபி கவனத்தினை ஈர்க்கின்றதா?


வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு முன்வைக்கப்படுமெனத் தெரிவித்த தேசிய மக்கள் சக்தி இயக்கத்தினர், இதற்காக ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவை தமிழ் மக்கள் ஆதரவிக்க வேண்டுமென்று விடுத்துள்ள வேண்டுகோள் கவனத்தை ஈர்த்துள்ளது.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தேசிய மக்கள் சக்தியால், நாட்டில் அனைத்து மக்களுக்குமான வரைபு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வரைபு ஜனாதிபதி தேர்தலுக்கு மட்டும் உருவாக்கவில்லையெனவும் இது இறுதியான வரைபல்ல எனவும் தெரிவித்தனர்.

நாட்டில், அனைத்து மாகாணங்களில் உள்ள மக்களுடன் பேசி அடிப்படை பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான திட்டங்களும் அந்த வரைபில் இணைத்துக் கொள்ளப்படுமெனத் தெரிவித்த அவர்கள் இறுதியாக. முழுமையான திட்டமாக அது மாற்றப்படுமெனவும் கூறினர்.

அரசியலில் மூன்றாவது பாதை தேவை என்பதை யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களும் ஏற்கின்றார்களெனத் தெரிவித்த அவர்கள், அதற்காக முற்போக்கு சிந்தனை உள்ள தமிழ் மக்கள் எங்களுடன் கைகோர்க்க வேண்டுமெனவம் கூறினர்.

கோல்வேஸில் கூடிய கூட்டத்தைப் போன்று, யாழ்ப்பாணத்தில் மக்கள் அலை ஒன்றை திரட்ட உள்ளதாகத் தெரிவித்த அவர், அதில் தமது ஜனாதிபதி வேட்பாளர் மக்கள் முன்தோன்றி பேசுவாரெனவும் அவருடனும் மக்கள் பேச முடியுமெனவும் கூறினர்.

தலைவர் பேசுவதை மக்கள் கேட்க வேண்டுமெனவும் அதே போன்று மக்கள் பேசுவதை தலைவர் கேட்க வேண்டுமெனவும், அவர் மேலும் கூறினார்.
ஜேவிபியின் அலுவலகமொன்று ஏற்கனவே யாழில் திறக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
வடகிழக்கு பிரிப்பு தொடர்பில் ஜேவிபி மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் வடக்கு கிழக்கு மாகாண இணைப்புக்கும் சமஸ்டிக்கும் ஜேவிபி பச்சைக்கொடி காட்டியுள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.

No comments