ஐநாவின் கூட்டத் தொடரில் சவேந்திர தொடர்பில் விவாதம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42வது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது.
ஜெனீவாவில் ஆரம்பிக்கும் இந்த கூட்டத் தொடர், எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெறும்.
இன்று ஆரம்பமாகின்ற கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமை நிலவரம் மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் குறித்து பிரதான நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்பட வில்லை. ஆனால் கூட்டதொடரின் பக்க கலந்துரையாடல்களின் போது இலங்கை குறித்து சர்தேச மன்னிப்புச்சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட ஐ.நாவில் நிரந்தர சிறப்பு அந்தஸ்துள்ள மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளன.
பொறுப்புக்கூறல் கடப்பாடுடையசவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள கூடிய விடயமல்ல. அத்தோடு பாதிப்புற்ற தரப்பினரை அச்சுறுத்துவதாகவும் அந்த மக்களை அச்ச சூழலுக்குள் தள்ளுவதுமாகவே இந்த நியமனம் அமையப்பெற்றுள்ளது. இந் நிலையானது நல்லிணக்கத்தை முற்றிலுத் பாதித்து விடும் என்றும் ஐ.நா நிபுணர்கள் குழு குறிப்பிட்டுள்ளது.
போர்க்குற்றங்களிலும், மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களிலும் இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படையணி தொடர்புப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, அந்த படையணியின் தளபதியாக செயற்பட்ட சவேந்திர சில்வா, ஐ.நா அமைதிகாக்கும் படைக்கான விசேட ஆலோசனைக் குழுவிலிருந்து 2012 ஆம் ஆண்டு நீக்கப்பட்டிருந்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30 (1) தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியதன் ஊடாக இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் பொறுப்புக்கூறலுக்கு இலங்கை உடன்பட்டுள்ளது என்றும் நிபுணர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments