சிறையில் தமிழ் இளைஞன் மர்மமாக மரணம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவன் இன்று (06) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை, சுங்காங்கேணியை சேர்ந்த ரி.கமல்ராஜ் (27-வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் வாழைச்சேனையில் கைகலப்பு ஒன்றிற்காக வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் ஊடாக குறித்த இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments