வறட்சியால் மீன்பிடி பாதிப்பு; அல்லல்படும் மீனவர்கள்

வறட்சி காரணமாக நன்னீர் மீன் பிடியில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குளத்தில் கொண்டுவந்து விடப்படும் முதலகைளாலும் அச்சுறுத்தப்படுவதாக இரணைமடு மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வறட்சி காரணமாக நன்னீர் மீன்பிடியிலும் பாதிப்பு ஏற்படுகின்றது. கடும் வறட்சி காரணமாக குளங்களின் நீர்ட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

இதன் காரணமாக நன்னீர் மீன்பிடியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. தற்போது நீர் வற்றியுள்ளமையால் மீன்பிடியில் நேரடியான பாதிப்பு இதுவரை ஏற்படவில்லை எனவும், இவ்வாறு வறட்சி தொடர்ந்தால் அடுத்த ஆண்டில் மீன்பிடியில் பாரிய பாதிப்பு ஏற்படும் எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியான சூழ்நிலைக்கு அடுத்த படியாக இரணைமடு குளத்தில் காணப்படும் முதலைகளின் அச்சுறுத்தல் தமக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாக இரணைமடு நன்னீர் மீன்பிடிப்பாளர்கள் தெரிவித்தனர்.

No comments