யாழ் பேருந்து நிலையத்தில் கத்திக்குத்து; மூவர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் - மத்திய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள இரு கடை உரிமையாளர்களுக்கு இடையில் இன்று (13) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற மோதலில் 3 பேர் கத்தி குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் நகரில் உள்ள இரு கடை உரிமையாளர்களுக்கிடையில் முரண்பாடுகள் இருந்துள்ளது. இந்த முரண்பாடு இன்று காலை வலுவான நிலையில் இரு தரப்பும் கத்திகள், வாள்களுடன் நகருக்குள் நின்று மோதியுள்ளன. இதன்போது 3 இளைஞா்கள் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளனர்.

ஒருவருக்கு வயிற்றிலும், ஏனைய இருவருக்கும் கைகள், கால்கள் போன்றவற்றில் காயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments