யாழ் சின்மயா மிஷனும் ஆதரவு?



தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்திருக்கும் எழுக தமிழ் நிகழ்வில் பங்கேற்று எங்கள் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் எழுக தமிழில் ஒன்றிணைவோம் என யாழ் சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரம்மச்சாரி சிதாகாசானந்தா சுவாமி அவர்கள் எழுக தமிழுக்கு ஆதரவாக விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளார். அப்பதிவில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்திருக்கும் எழுக தமிழ் நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தமிழர்களாகிய எங்களுடைய தேவைகளையும், எங்களுடைய உரிமைகளுக்கான குரல்களையும் எடுத்துச் செல்லுகின்ற ஒரு நிகழ்வாக மக்கள் இயக்கமாகிய தமிழ் மக்கள் பேரவை எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை முன்னெடுத்திருக்கின்ற இந்த எழுக தமிழுக்கு அனைத்து தமிழர்களும் எந்தவித கட்சி பேதமுமின்றி வேறு எந்த பேதங்களுமின்றி இந்த நிகழ்விலே கலந்துகொள்ள வேண்டும்.

நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்களுடைய தேவைகளையும், வேண்டுதல்களையும் முழு உலகத்திற்கும் தெரியப்படுத்தும் பொழுதான் நிச்சயமாக எங்கள் இலக்கை அடைய முடியும். மக்கள் எழுச்சியின் மூலமாகத்தான் உரிமைகள் வென்றெடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையிலேயே தமிழ்த்தேசிய சிந்தனையிலேயே இந்த எழுக தமிழ் நிகழ்வில் அனைவரும் வந்து பங்குபற்றவேண்டிய நிகழ்வாக இருக்கின்றது.

எழுக தமிழ் நிகழ்வில் பங்குபற்றுவதன் ஊடாக எங்களுடைய விடுதலையை, எங்களுடய உரிமைகளை உலகிற்கு வெளிப்படுத்த முடியும். அந்தவகையில் அரசியல் தலைவர்கள் மற்றும் ஆன்மீகத் தலைவர்களாகிய நாங்களும் இவ் எழுக தமிழ் மக்கள் எழுச்சிப் பேரணியில் முழுமையாக இணைந்திருக்கின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments