ஒரு கொலை; மூவருக்கு மரண தண்டனை

மொரட்டுவை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச்சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்ட மூவருக்கு பாணந்துறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2009 ஆம் பெப்ரவரி மாதம் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் 7 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், குற்றம்சுமத்தப்பட்டவர்களில் நால்வரை விடுதலை செய்த நீதிமன்றம், ஏனைய மூவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

No comments