கொடூர கொலையாளிகளை 12 மணி நேரத்தில் சுற்றிவளைத்து பிடித்த பொலிஸ்


பாதாள உலகக் குழுக்­க­ளி­டையே பழி தீர்க்கும் படலம் மீள தலை தூக்க ஆரம்­பித்­துள்­ளது. அதன் படி நேற்று முன் தினம் இரவு ஹங்­வெல்லை நகரில் எம்­புல்­கம சந்­தியில் ஒருவர் சுட்டும் வெட்­டியும் படு கொலை செய்­யப்­பட்­டுள்ளார். இதன்­போது குறித்த சந்­தியில் வடை வர்த்­தகம் செய்யும் அப்­பாவி இளைஞர் ஒரு­வரும் பாதாள உல­கத்­துடன் தொடர்­பு­டைய இலக்கு வைக்­கப்­பட்ட பிர­தான நபரும் படு காய­ம­டைந்­துள்­ளனர்.

தற்­போது மூன்று கொலைகள், ஒரு கொலை முயற்சி, நவ­க­முவ பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரிக்கு மரண அச்­சு­றுத்தல் விடுத்த சம்­ப­வங்கள் தொடர்பில் விளக்­க­ம­றியல் உத்­த­ரவின் கீழ், அங்­கு­கொ­ல­பெ­லஸ்ஸ சிறையில் உள்ள பாதாள உலகக் குழு­வொன்­றினை வழி நடாத்தும் தினித் மெவன் மாபுல என்ற ஊறு­ஜுவா இந்த தாக்­கு­தலை வழி நடத்­தி­யுள்­ளமை விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அதன்­படி தாக்­கு­தலை நடத்­திய சந்­தேக நபர்கள் 7 பேரில் உள்­ள­டங்கும் ஐவ­ரையும், தாக்­கு­த­லுக்கு உதவி ஒத்­தாசை வழங்­கிய ஒரு­வ­ரையும் 12 மணி நேரத்­துக்குள் பொலிஸார் கைது செய்து மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இந்த சம்­ப­வத்தில் மற்­றொரு பாதாள உலக குழுவை வழி நடத்­திய இந்­துனில் வஜிர குமா­ர­வையே இலக்கு வைத்து தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் படு­கா­ய­ம­டைந்து கொழும்பு வைத்­தி­ய­சா­லை­யிலும், காய­ம­டைந்த அப்­பாவி இளை­ஞ­ரான 27 வய­தான பால­சுப்­ர­ம­ணியம் ஜீவன் அவி­சா­வளை வைத்­தி­ய­சா­லை­யிலும் சிகிச்சை பெறு­வ­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

ஹங்­வெல்லை பொலிஸ் நிலை­யத்தில் நேற்று வி‍சேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்­றினை அவர் நடத்­திய நிலையில் இது குறித்த தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தினார். அதன்­படி குறித்த சம்­பவம் சுருக்­க­மாக வரு­மாறு:
‘ஹங்­வெல்ல – எம்­புல்­கம சந்­திக்கு இருவர் நேற்று காரில் வந்­துள்­ளனர். அவர்கள் காரி­லி­ருந்து இறங்கும் போது, சிறிய ரக வேன் ஒன்­றிலும் இரு மோட்டார் சைக்­கிள்­க­ளிலும் வந்த குழு­வொன்­றினால் துப்­பாக்கிச் சூடும் வாள் வெட்டும் நடத்­தப்­பட்­டுள்­ளது.

இதன்­போது, 23 வய­தான சுரேஷ் ருவந்த குண­சிங்க எனும் இளைஞர் படு காய­ம­டைந்த நிலையில் நவ­க­முவ வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­படும் போது உயி­ரி­ழந்­துள்ளார். காரை செலுத்தி வந்த பாதாள உலக குழு தலைவன், 26 வய­தான இந்­துனில் வஜிர குமார படு காய­ம­டைந்து ஹோமா­கம வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்ளார். பல கொலை குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு இலக்­கா­கி­யுள்ள இவர் கடந்த இரு மாதங்­க­ளுக்கு முன்­ன­ரேயே பிணையில் வெளியே வந்­துள்ளார்.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே சம்­பவம் இடம்­பெற்ற சந்­தியில் வடை விற்கும் அப்­பாவி இளைஞர் ஒரு­வரும் சம்­ப­வத்தில் காய­ம­டைந்து அவி­சா­வளை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கின்றார்.

நேற்று முன்தினம் இரவு 8.30 இற்கு இடம்­பெற்ற இந்த சம்­பவம் தொடர்பில் நுகே­கொடை சட்ட அமு­லாக்கல் பிரிவு மற்றும் மேல் மாகாண தெற்கு குற்­றத்­த­டுப்புப் பிரிவு ஆகி­ய­வற்றின் உத­வி­யுடன் ஹங்­வெல்லை பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

இதன்­போது, நவ­க­முவ பொலி­ஸா­ருக்கு சந்­தேக நபர்கள் பய­ணித்த வேனின் இலக்கம் தொடர்பில் தகவல் கிடைத்­துள்­ளது. அது ஹங்­வெல்லை பொலி­சா­ருக்கு பரி­மாற்­றப்­பட்டு வேனின் உண்மை உரி­மை­யாளர் கண்­ட­றி­யப்­பட்­டுள்ளார். கொலன்ன பகு­தியைச் சேர்ந்த பெண் ஒரு­வரே அவ்­வேனின் உரி­மை­யாளர் என்ற நிலையில் கொலன்ன பொலிஸார் அப்­பெண்ணின் முக­வ­ரியில் சென்று விசா­ரித்­துள்­ளனர்.

இதன்­போது, அப்பெண் வீட்டில் இருக்­காத நிலையில் அவ­ரது கணவர் பதி­ல­ளித்­துள்ளார். இற்­றைக்கு ஒன்­றரை மாதங்­க­ளுக்கு முன்னர் அந்த வேனை 40 ஆயிரம் ரூபா மாத வாடகை அடிப்­ப­டையில் பிய­கம பகு­தியில் வாகன வாடகை நிறு­வனம் ஒன்­றுக்கு கைய­ளித்­த­தாக அவர் கூறி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து பிய­கம பொலி­ஸா­ருடன் ஹங்­வெல்லை பொலிஸார் பிய­க­மவில் உள்ள குறித்த வாகன வாடகை நிறு­வ­னத்­துக்கு சென்று விசா­ரித்­துள்­ளனர். குறித்த வேன் நேற்று முன்தினம் காலை 10 ஆயிரம் ரூபா முற்­பணம் செலுத்­தப்­பட்டு 3000 ரூபா நாள் வாடகை அடிப்­ப­டையில் பெறப்­பட்­டுள்­ளது. வேனை பெற்­றவர், சந்­தேக நபர்­களில் ஒரு­வரின் சகோ­த­ரனின் அடை­யாள அட்­டையை சமர்ப்­பித்தே வேனைப் பெற்­றுள்ளார். இந்த தக­வல்­க­ளுக்கு மேல­தி­க­மாக, அந்த வேனில் ஜீ.பி.எஸ். தொழில் நுட்பம் இணைக்­கப்­பட்­டுள்­ள­மை­யையும் பொலிஸார் கண்­ட­றிந்­தனர்.

இத­னை­ய­டுத்து விசா­ர­ணைகள் ஜீ.பீ.எஸ். தொழில் நுட்பம் ஊடே முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.அதன்­படி, குறித்த வேன், தலங்­கம பொலிஸ் பிரிவில் குமா­ரகே வத்த பகு­தியில் கட்­டப்­பட்டு வரும் இரு மாடி வீடொன்­றுக்கு முன்­பாக இருப்­பதை பொலிஸார் கண்­ட­றிந்­தனர். அங்கு சென்ற பொலிஸார், அந்த வீட்டில் பிர­தான மேஸ்­தி­ரிக்கு கையு­த­வி­யா­ளர்­க­ளாக இருந்த இரு­வரைக் கைது செய்து விசா­ரித்த போது, அதில் ஒருவர் கொலை­யுடன் நேர­டி­யா­கவும் மற்­றை­யவர் அதற்கு உதவி ஒத்­தாசை புரிந்­துள்­ள­மையும் தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து அவ்­வேனை மீட்ட பொலிஸார், அங்கு உதவி ஒத்­தாசை புரிந்த நப­ரிடம் இருந்து தப்பிச் செல்ல பயன்­ப­டுத்­திய ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்­கி­ளொன்­றி­னையும் மீட்­டனர். ஜல்­தர, ரணால பகு­தியைச் சேர்ந்த சமில நிஷாந்த, ரணில் அல்­மேதா ஆகிய சந்­தேக நபர்­களே கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளாவர்.

இத­னி­டையே, பொலிஸ் வி‍சேட அதி­ரடிப் படை­யி­ன­ருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில், கடு­வலை நகர சபைக்கு அருகில் உள்ள பெரேரா குறுக்கு வீதியின் அருகில் உள்ள பாழ­டைந்த இடத்தில் இருந்து இக்­கொ­லை­யுடன் தொடர்­பு­டைய மேலும் இருவர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இரா­ணு­வத்­தி­லி­ருந்து தப்பி வந்த ஜல்­தர, ரணால பகு­தியைச் சேர்ந்த கயான் மது­சங்க அத்­த­நா­யக்க, என்ப­வரும் நயன குமார முண­சிங்க என்­ப­வ­ருமே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளாவர். கயா­னி­ட­மி­ருந்து 9 மில்லி மீற்றர் ரக தோட்­டாக்கள் பயன்­ப­டுத்தத் தக்க உள் நாட்டு தயா­ரிப்பு ரிவோல்வர் ஒன்று மீட்­கப்­பட்­டுள்­ளது. மூன்று தோட்­டாக்­களும் ஒரு வெற்றுத் தோட்­டாவும் இதன்­போது கிடைத்­துள்­ளன. மற்­றை­ய­வ­ரி­ட­மி­ருந்து கொலைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட கூரிய ஆயு­தங்கள் சில மீட்­கப்­பட்­டுள்­ளன.

இத­னை­ய­டுத்து அதி­ரடிப் படை­யினர் அவர்­க­ளிடம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் கொலை­யுடன் நேர­டி­யாக தொடர்­பு­பட்ட மேலும் இருவர் தொடர்பில் தகவல் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 18 வயதுடைய சானுக சாலிந்த சில்வா, தொன் நதுன் சானக ரத்நாயக்க ஆகிய குறித்த இருவரையும் அதிரடிப் படையினர் தொம்பே, பலலகம பகுதியில் வைத்து நேற்று நண்பகல் கைது செய்தனர்.

அதன்படி இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை பிரதான சந்தேக நபர்கள் 5 பேரும் உதவி ஒத்தாசை வழங்கிய ஒருவருமாக அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கொலையுடன் நேரடியாக 7 பேர் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் பொலிஸ் விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நேரடியாக தொடர்புபட்ட மேலும் இருவரும் உதவி ஒத்தாசை புரிந்த ஏனையோரையும் கைது செய்ய வி‍சேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

No comments