மன்னாரில் தொடர் வேலை நிறுத்தம்


பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் வீதி ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை காலை முதல் முன்னெடுத்த  பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் 2 ஆவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை தொடர்ந்து  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 இதன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.மன்னார் மற்றும் மன்னாரிலிருந்து வெளி மாவட்டங்களுக்கான இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் வீதி சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

No comments