பாணின் விலையில் மீளவும் திருத்தம்

பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட போதிலும் பழைய விலைக்கே பாண் விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

6 ஆம் திகதி நள்ளிரவு முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

பிரிமா கோதுமை மாவின் விலையை அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்திருந்தது.

No comments