மக்கள் போராட்டத்திற்கு வெற்றி; பயங்கரவாதியின் தலை அகற்றம்

மட்டக்களப்பு - கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட சீயோன் ஆலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி எம்.என்.எம்.அசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்கள் இன்று (02) சற்றுமுன்னர் தோண்டி எடுக்கப்பட்டு அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த உடற்பாகங்கள் பிறிதொரு இட்தில் புதைக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் குறித்த தலை தோண்டி எடுக்கப்படுகிறது.

அண்மையில் குறித்த குண்டுதாரியின் தலையை கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டதையடுத்து பிரதேசவாசிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு பல்லடி பாலத்திற்கு அருகில் பாதையை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டு கலைத்திருந்தனர்.

இந்நிலையிலேயே குறித்த தலையை மீண்டும் தோண்டி எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தது.

No comments