சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் கைது!


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பிரதேசத்தில் 15 வயது சிறுமியான சகோதரியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட 20 வயதுடைய சகோதரனை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (18) உத்தரவிட்டார்.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த சிறுமியின் தந்தையாரின் முதல் மனைவியின் மகனான 20 வயது சகோதரன் தந்தையாரின் இரண்டாவது மனைவியின் மகளான 15 வயது சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த இளைஞரை நேற்று (27) கைது செய்தனர்.

No comments