தேசியத் தலைவரின் படத்துடன் டில்லியில் பல்லின மக்கள் போராட்டம்;

ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலையை கொண்டுவர வலியுறுத்தியும் காஷ்மீரி மக்களின் உரிமைகளை முடக்கிய மத்திய அரசை கண்டித்தும் தடையை மீறி டெல்லியில் நடைபெற்றுவரும் தேசிய இனங்களின் ஒற்றுமை அணிவகுப்பு மற்றும் பேரணியில் தமிழகத்திலிருந்து  நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் மற்றும்  தமிழ்த் தேசிய பேரியக்கத் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அவர்களும் பங்கேற்றுள்ளார், இதில் காஷ்மீரிய , சீக்கிய மற்றும் இந்திய அரசினால் ஒடுக்குமுறைகளுக்குள்ளாகும் பல்வேறு இனத்தவர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ளனர், இதில் புரட்சியாளர்கள் படங்களுக்கு நடுவே தமிழீழ தேசியத்தலைவரின் படமும் பாலச்சந்திரன் படத்தை தாங்கிக் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments