நீராவியடி விவகாரம்:ஆளுநரும் சீற்றம்!


நீதி­மன்ற உத்­த­ர­வையும் மீறி மேதா­லங்­கார தேரரின் உடல் தகனம் செய்­யப்­பட்­ட­மையை நீதிக்கு  இழைக்­கப்­பட்ட அவ­ம­திப்­பா­கவே கரு­து­வ­தாகத் தெரி­வித்த வட மாகாண ஆளுநர் கலா­நிதி சுரேன் ராகவன், யாரே­னு­மொ­ருவர் நீதியை தனது தனிப்­பட்ட தேவைக்­கேற்ப வளைப்­பது ஜன­நா­ய­கத்­திற்கு விரோ­த­மா­ன­தாகும் என்றும் குறிப்­பிட்டார்.
கொழும்பு – பத்­த­ர­முல்­லவில் உள்ள வட மாகாண ஆளுனர் உப அலுவல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே ஆளுனர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,நீதி­மன்ற உத்­த­ர­வையும் மீறி கொலம்பே மெதா­லங்­கார தேரரின் உடல் தகனம் செய்­யப்­பட்­ட­மையை நீதிக்கு  இழைக்­கப்­பட்ட அவ­ம­திப்­பா­கவே கரு­து­கின்றேன். இதன் கார­ண­மாக வடக்கு , கிழக்கில் சட்­டத்­த­ர­ணிகள் பணி­ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றனர். இது விரைவில் தீர்க்­கப்­பட வேண்­டிய விட­ய­மாகும்.
தற்­போது தேர்தல் கால­மாகும். தேர்தல் காலங்­களில் நாட்டில் சமா­தா­னமும், ஜன­நா­ய­கமும், நீதியும் நிலவ வேண்டும். எனினும் தற்­போது இவை மூன்­றை­யுமே குழப்பும் வகையில் சில நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அத்­தோடு வடக்கில் தமிழ் மக்­களின் வாக்­கு­களை பல­வந்­த­மாக பெற்றுக் கொண்ட வர­லாற்­றையும் நாம் கண்­டுள்ளோம். எனினும் நாம் அதனை முழு­மை­யாக நிரா­க­ரிக்­கின்றோம்.
தமிழ் மக்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்ள வேண்­டு­மானால் ஜன­நா­ய­கத்­துடன் செயற்­ப­டு­மாறு தெற்­கி­லி­ருந்து வடக்­கிற்கு வந்து அர­சியல் செய்யும் அர­சி­யல்­வா­தி­க­ளுடன் கேட்டுக் கொள்­கின்றேன். மாறான தமிழ் மக்­களை பய­மு­றுத்­தியோ , இன வாதத்தை தூண்­டியோ , மத வாதத்தை தூண்­டியோ வாக்­கு­களைப் பெற்ற எந்த அரசும் நீண்ட காலம் நிலைக்­க­வில்லை என்­பது வர­லா­றாகும்.
எனவே ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் மக்­களின் வாக்­குகள் மிக முக்­கி­ய­மா­ன­தாகும். தமிழ் மக்­களை அவர்­க­ளது வாக்­கு­களை நியா­ய­மான முறை­யிலும் சுதந்­தி­ர­மா­கவும் வழங்­கு­வ­தற்கு அந்த மக்­க­ளுக்கு வாய்ப்­ப­ளிக்­கப்­பட வேண்டும். 1982 ஆம் ஆண்டைப் போன்று வன்­முறை அர­சி­யலில் ஈடு­ப­டாமல் ஜன­நா­யக ரீதி­யாக செயற்­ப­டு­மாறும் அனைத்து தமிழ் , சிங்­கள கட்­சி­க­ளிடம் கேட்டுக் கொள்­கின்றேன்.
இந்த விவ­கா­ரத்தில் நீதி­மன்றம் கூறும் தீர்ப்பு இறு­தி­யான தீர்ப்­பாக இருக்க வேண்டும். நீதி­மன்­றத்தின் தீர்ப்புக்கு அனைவரும் தலை வணங்க வேண்டும். அது இந்நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும். எவரொருவரும் நீதியை தமது தனிப்பட்ட தேவைக்கேற்ற திருப்புவதையோ, வளைப்பதையோ நாம் ஜனநாயக விரோதமாகவே கருதுகின்றோம் என தெரிவித்துள்ளார்..

No comments