யாழ்.மாவட்ட செயலகத்தில் நியமனங்கள்?


யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபராக மருதங்கேணி பிரதேச செயலராக இருந்த, திரு கனகசபாபதி கனகேஸ்வரன்  பொறுப்பேற்றுக்கொண்டார்.
இது வரை யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபராக இருந்த திருமதி சுகுணரதி தெய்வேந்திரம், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரசகரும மொழிகள் மற்றும் இந்து விவகார அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் .இதேவேளை மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு யாரையும் நிரந்தரமாக நியமிக்காத காரணத்தால், பருத்தித்துறை பிரதேச செயலர் திரு ஆழ்வாப்பிள்ளை சிறி, மேலதிக கடமையாக பொறுப்பெடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை இலங்கை நிர்வாக சேவையின் அதி விசேட தரத்தில் 78 வது இடத்தில் இருக்கும் யாழ் மாவட்ட அரச அதிபர் திரு வேதநாயகன், வரும் வருடம் (2020) மே மாதம் ஓய்வு பெறவுள்ளதால், அடுத்த அரச அதிபருக்கான பெயர் தேடல்கள் வெளிக்கிளம்ப ஆரம்பித்திருக்கின்றன.

No comments