பாடசாலைக்கு ஒதுக்கிய நிதி இடைநிறுத்தம்; எதிராக போராட்டம்

கல்முனை கல்வி வலயம், சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலயத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி இடை நிறுத்தப்பட்டுள்ளமையைக் கண்டித்து இன்று (12) கல்முனை வலயகல்வி அலுவலகத்தின் முன்னால்  கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. 

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு கல்வியமைச்சின் "அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ஒரு கோடி 90 இலட்சம் ரூபா பணத்தை இடைநிறுத்தி வேறு பாடசலைக்கு கொண்டு செல்ல அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக கூறி கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்று வரும் போராட்டத்தின் ஒரு அங்கமாக  இது இடம்பெற்றது.

No comments