கரையொதுங்கியுள்ள மர்மப் படகுகள்! உசார் நிலையில் இராணுவம்!

தென்னிந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக  இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குஜராத்தின் ‘சர் க்ரீக்' என்று சொல்லப்படும் இடத்திற்கு அருகில் ஆள் இல்லாத மர்மப் படகுகள் கரையொதுங்கி உள்ளதாகவும்.
இதானால் பாகிஸ்தானைச் சேர்ந்த கமாண்டோஸ் சிலர், குஜராத் கடல் மார்க்கமாக வந்து நாட்டிற்கு எதிராக தீவிரவாத தாக்குதலில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக சில வாரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் தற்போது ‘தென்னிந்தியாவுக்கு சிவப்பு எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளதோடு இராணுவமும் பாதுகாப்பு பிரிவினரும் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

 கடந்த மாதம் இந்திய அரசு, காஷ்மீர் சிறப்பு சட்ட அந்தஸ்தை ரத்து செய்து, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. அப்போதிலிருந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உரசல் போக்கு நிலவி வருகிற வேளையில் இவரான எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

No comments