சிவரூபனை முன்வைத்து அரங்கேறும் நாடகம்?


பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதடுத்து வைக்கப்பட்டுள்ள பளை வைத்தியசாலையின் வைத்தியர் சின்னையா சிவரூபனினை முன்னிறுத்தி தெற்கில் அரசியல் பரபரப்பான சூழல் ஒன்றை உருவாக்க அரசு முற்படுவது அம்பலமாகியுள்ளது.

முன்னதாக வைத்தியர் சின்னையா சிவரூபன்  கோத்தபாய,மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரி என பலரை கொலை செய்ய திட்டமிட்டதாக ஊடகங்களிற்கு செய்திகள் இலங்கைப்படைகளால் கசியவிடப்பட்டிருந்தது.

தற்போது வைத்தியர் சின்னையா சிவரூபனின் தகவலின் அடிப்படையில் பளை - கரந்தாய் பகுதியில் இன்று (26) ஆயுதங்கள், வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக இலங்கை காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வைத்தியரை விடுவிக்காவிடின் தொடர் கடையடைப்பு போராட்டமென மக்கள் தயாராகிவருகின்ற நிலையில் ஆயுத மீட்பு கதை வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழிற்கு வெள்ளியன்று வருகை தரவள்ள நிலையில் இத்தகைய பரபரப்பான செய்திகள் பரப்பப்படுகின்றமை சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

No comments