மோதிரத்தால் நடந்த கொடூரம்; தந்தையை கொன்ற மகன்

குருநாகல் - ஆணமடுவ, பள்ளம பகுதியில் நேற்று (30) இரவு 7.30 மணியளவில் மகன் ஒருவர் தந்தையை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தையடுத்து உயிரிழந்தவரின் 32 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது திருமணத்திற்காக வைத்திருந்த மோதிரத்தை தந்தை விற்பனை செய்து மது அருந்தியதன் காரணமாக, கோபமடைந்த மகன் தனது தந்தையை அடித்து கொலை செய்துள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

No comments