கொசுக்களை கட்டுப்படுத்த லண்டனில் ஒப்பந்தம் போட்ட எடப்பாடி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் முறையாக அரச அலுவலாக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாள் பயணமாக நேற்று புறப்பட்ட அவர் முதலில் பிரித்தானிய தலைநகர் லண்டன் சென்றுள்ளார்.
லண்டனில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் தமிழக அரசு மேற்கொண்ட 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

நுளம்பால் (கொசுக்களால்) பரவும் தொற்று நோய்களை முழுமையாக கட்டுப்படுத்துவது, மருத்துவர் மற்றும் செவிலியர் பணி பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் கையெழுத்தாகியுள்ளது.
இந்த பயண நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக உயர் அதிகாரிகளும், லண்டன் நிறுவனத்தின் அதிகாரிகளும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments