கடத்தல் வழக்கில் தொடர்புடைய ரவீந்தரவின் பதவிக்காலம் நீடிப்பு

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 

இவரது பதவிக் காலம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்வின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இவர் 11 தமிழ் இளைஞர்களை கடத்திய சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான நேவி சம்பத் என்ற கடற்படை வீரரை நாட்டை விட்டு செல்ல உதவி முக்கிய நபராக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments