வியாபாரம் செய்து கொண்டிருந்தவர் மயங்கி விழுந்து மரணம்

தென்மராட்சி - சாவகச்சேரி சந்தை வியாபாரி ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்தார்.

சாவச்சேரி சந்தையில் பழவகைகள் விற்பனை செய்யும் வியாபாரி, அங்கு வந்தவரிடம் மாம்பழம் வாங்குவதற்காக எழும்பிய போது மயங்கி வீழந்துள்ளார்.

அங்கிருந்தவர்கள் அவரை சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments