இப்படியான ஒருவருக்கே இதாகொவின் ஆதரவு!

நாட்டிற்கு நல்லதொரு தலைமைத்துவத்தை வழங்ககூடிய ஒரு அமைப்புக்கே ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நேற்று (30) மாலை கொட்டகலை சீ.எல்.எப். கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் பி. சக்திவேல்,

மலையக மக்களுக்கு தேவையான 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற தலைமைத்துவத்திற்கு இ.தொ.கா.வின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும். தற்பொழுது நாட்டில் இடம்பெறுகின்ற அரசியல் சூழ்நிலை தொடர்பில் தேசிய சபையில் ஆராயப்பட்ட போது இரண்டு கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது, ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் யார் என்பது எமக்கு இதுவரையிலும் தெரியாது.

எனவே, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களை அனைத்து கட்சிகளும் அறிவிக்கபட்டதை தொடர்ந்து எமது தேசிய சபையின் ஊடாக மத்திய மாகாண முன்னாள் அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரனும் மற்றும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் ஊடாக அரசியல் ரீதியாக எமது தேசிய சபை பல்வேறு விடயங்களை ஆய்வு செய்து, எமது உப தலைவர்கள் ஊடாக எமது தலைவருக்கு அறிவிக்கபட்டதை அடுத்து மேலதிக நடவடிக்கையினை எமது தலைவர் மேற்கொள்வார். என்றார்.

No comments