செஞ்சோலை படுகொலைக்கு நினைவு வளையம்; விசாரணைக்கு அழைத்த காவல்துறை!
கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வள்ளிபுனம் செஞ்சோலை
வளாகத்தின்மீது ஸ்ரீலங்கா வான்படையின் விமானங்கள் நடத்திய குண்டு கொடூர குண்டுத் தாக்குதலில் 54
பாடசாலை மாணவிகள் உயிரிழந்தனர்.
அவர்களுடைய 13 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி நினைவேந்தப் படவுள்ள நிலையில் வள்ளிபுனம் செஞ்சோலை செல்கின்ற வீதியில் அவர்களுக்காக பாரிய நினைவு வளைவு ஒன்று அமைக்கப்பட்டது.
குறித்த நினைவு தூபி வளையம் சகல அனுமதிகளும் பெற்று அமைக்கப்பட்ட போதும் மாணவர்களின் படங்களை பதிப்பதற்கு காவல்துறை தடை விதித்திருக்கிறார்கள். அத்தோடு குறித்த பணிகளை முன்னெடுத்த கட்டிட வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட சிலரை இன்று காலை புதுக்குடியிருப்பு காவல்நிலையத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவர்களுடைய 13 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி நினைவேந்தப் படவுள்ள நிலையில் வள்ளிபுனம் செஞ்சோலை செல்கின்ற வீதியில் அவர்களுக்காக பாரிய நினைவு வளைவு ஒன்று அமைக்கப்பட்டது.
குறித்த நினைவு தூபி வளையம் சகல அனுமதிகளும் பெற்று அமைக்கப்பட்ட போதும் மாணவர்களின் படங்களை பதிப்பதற்கு காவல்துறை தடை விதித்திருக்கிறார்கள். அத்தோடு குறித்த பணிகளை முன்னெடுத்த கட்டிட வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட சிலரை இன்று காலை புதுக்குடியிருப்பு காவல்நிலையத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment