கோர விபத்தில் சிக்கிய குடும்பம் - பெற்றோர் பலி பிள்ளைகள் தப்பினர்

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா – உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் எஸ்கடேல் தோட்டம் ‘ஐஸ் பீலி’ என்றழைக்கப்படும் இடத்தில் இன்று (17) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 3 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
சுமார் நூறு அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி ஒன்று வீழ்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணித்த ஐவரில் இருவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே, உயிரிழந்ததாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்பாேது, தாய் (45), தந்தை (50) ஆகியோர் பலியாகினர். அவர்களது பிள்ளைகளான (06), (16), (19) வயதுடைய மூவர் படுகாயமடைந்தனர்.

No comments