சித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா?


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்னாள் மூத்த போராளியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதனை அக்கொலைகளை அரங்கேற்றுவதில் முன்னின்ற பொபி என்று அழைக்கப்படும் மொழி இறப்பதற்கு முன்பும் கூறியிருந்தார் எனவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
போராட்ட ஆரம்ப காலப்பகுதிகளில் தற்போதைய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் தந்தையாரான தர்மலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் இந்திய பணிப்புரையின் பேரில் டெலோ தலைமையால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments