பொலிஸ் கிரிக்கெட் உலகக் கிண்ணம் இலங்கை வசமானது

ஆறாவது பொலிஸ் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இலங்கை பொலிஸ் கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளது என்று பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

இங்கிலாத்தில் நடைபெற்று வந்த இந்த ஆறாவது பொலிஸ் உலகக் கிண்ணத்தின் இறுதி ஆட்டத்தில் இன்று (17) இலங்கை பொலிஸ் அணி மேற்கு அவுஸ்திரேலியா பொலிஸ் அணியை எதிர்த்தாடியது.

இந்நிலையில் மேற்கு அவுஸ்திரேலிய பொலிஸ் அணியை தோற்கடித்து இலங்கை பொலிஸ் அணி சம்பியனாகியுள்ளது.

ரி-20 உலகக் கிண்ணமான இதில் ஒன்பது பொலிஸ் அணிகள் விளையாடியிருந்தன.

No comments