ஜனாதிபதி வேட்பாளர்:பிளக்கிறது ஜதேக?


எந்த உறுப்பினராவது கட்சியின் விதிமுறைகளை மீறினால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாளை மறுதினம் (திங்கட்கிழமை) பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வு ஒன்று பதுளையில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் ஏற்பாடு செய்யப்படுகின்றது. இதில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
இந்த நிகழ்வு தொடர்பாக அமைச்சரும் கட்சியின் பொதுச் செயலாளருமான அகில விராஜ் காரியவசத்திடம் கேள்வியெழுப்பப்பட்டது, இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், எந்தவொரு நிகழ்வையும் நடத்துவதற்கு கட்சி எதிர்க்காது என்றார்.
ஆனால் அதில் பங்கேற்கும் கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையினை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை மீறும் பட்ச்சத்தில் எவருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வினை நடத்துவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளருக்கு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments