சிலாவத்தை விபத்தில் ஒருவர் பலி!

 
முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் வீதியை விட்டு விலகிய கடலுணவு கூலர் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார். 

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 

கொக்குளாய் - முகத்துவாரம்  பகுதியினை சேர்ந்தவர்களின் கூலர் வாகனம் ஜஸ் ஏற்றுவதற்காக சிலாவத்தை நோக்கி  சென்றபோது வீதியினை விட்டு விலகி தொலைத்தொடர்பு கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது .

இந்நிலையில் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் பயணித்த ஒருவர்  காயமடைந்துள்ளார்.

No comments