படகு கவிழ்ந்தது! ஒருவரைக் காணவில்லை! 6 பேர் கரை சேர்ந்தனர்!

திருகோணமலையில் மீன்பிடிக்கச் சென்றவரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, வெருகல் பிரதேசத்தில் மீன் பிடிக்கச் சென்ற ஏழு  மீனவர்களில் ஒரு மீனவரைக் காணவில்லை. காணாமல் போன மீனவர் வெருகல் - இலங்கை துறைமுகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் பரமானந்தம் (28 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று சனிக்கிழமை இரவு தனது ஏழு நண்பர்களுடன் மீன் பிடிப்பதற்காக படகில் சென்றபோது படகு இயந்திர கோளாறு காரணமாக கவிழ்ந்ததையடுத்து ஆறு  மீனவர்கள் நீந்தி கடற்கரையை வந்தடைந்துள்ளனர். காணமல்போன பாலசிங்கம் பரமானந்தம் இதுவரை கரை சேரவில்லை. அவரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

No comments