கன்னியாவில் பதற்றம்! போராட்டத்திற்குத் தடை விதிப்பு!

திருகோமலையில், கன்னியா வென்னீரூற்றப் பிள்ளையார் கோவிலைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தி நடத்தபடவிருந்த பொதுமக்கள் போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தடையை காவல்துறையினர் நீதிமன்றில் பெற்றுள்ளனர்.

பிள்ளையார் கோவிலுக்குத் தவத்திரு அடிகளார்  தலைமையில் பொதுமக்கள் சென்றபோது கன்னியா வென்னீரூற்று வீதியில் தடுக்கப்பட்டுள்ளனர்.போராட்டம் மற்றம் வழிபாட்டுக்குத் தடை உத்தரவு பிறப்பித்த பத்திரத்தைக் காண்பித்து பொதுமக்களை தடுத்துள்ளனர் காவல்துறையினர்.
இதநேரம் போராட்டத்தை தடுப்படுதற்கு முன்னேற்பாடாக இராணுவத்தினர் மற்றும்  காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

தடை உத்தரவால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீதிகளில் அமர்ந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.











No comments