சத்தமின்றி நாடு திரும்பிய கோத்தா?


அடுத்த ஜனாதிபதி வேட்பாளரென சொல்லப்படும் கோத்தபாய சிங்கப்பூரில் சத்திரசிகிச்சை முடித்துகொண்டு சத்தமின்றி  நேற்றிரவு நாடு திரும்பினார்.

மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு சிங்கப்பூரிலிருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ நேற்று (23) இரவு 11.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூர் விமான சேவைக்குச் சொந்தமான எஸ்.கியு 468 எனும் இலக்க விமானத்தில் அவர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவரை பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக களமிறக்க வேண்டும் என சில தரப்புக்களினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு அழுத்தங்கள் வழங்கப்பட்டு வருகின்றதாக சொல்லப்படுகின்ற நிலையில் சத்தம் சந்தடியின்றி கோத்தபாய இலங்கை திரும்பியுள்ளார்.

No comments