மின்குமிழ்கள் பயன்படுத்தவேண்டாம்! அகதிகளுக்குக் கட்டளை.

தமிழகத்தின் ஈழ ஏதிலிகள் வாழும் கும்மிடிப்பூண்டி முகாமில் உள்ள வீடுகளில் குண்டு மின்குமிழ்களை பயன்படுத்திட கூடாது எனவும்  அத்தோடு முகாமில் உள்ள கடைகளில் குண்டு மின்குமிழ்கள் விற்க கூடாது என்று தாசில்தார் அலுவலகத்தில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

குண்டு மின்குமிழ்களுக்கு மின்சாரம் அதிகம் செலவாகும் என்பதால் இவ்வறிவிப்பு கொடுக்கப்படுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டியில் உள்ள முகாமில் 920 குடும்பங்களைச் சேர்ந்த 2833 ஈழ தமிழர்கள் வசித்து வருகின்ற வீடுகளுக்கு இலவச மின்சாரம்களே வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments