வவுனியா, மன்னாரில் நில நடுக்கம்?


வவுனியா தாண்டிக்குளம், பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் இன்று காலை நில நடுக்க அதிர்வுகளை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
தாண்டிக்குளம், பத்தினியார் மகிழங்குளம் பகுதியைச் சுற்றிய சில வீடுகளில் நில நடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாகவும் காலை 9.52மணியளவில் இது உணரப்பட்டுள்ள போதிலும் நான்கு, ஜந்து செக்கன் வரையும் இது நீடித்துள்ளதுடன் வீடுகளுக்கு எவ்வித சேதங்களும் ஏற்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வழமைக்கு மாறாகவே இன்றைய சம்பவம் தென்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இதேபோல் மன்னார் மாவட்டத்திலும் நில அதிர்வுகளை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments