வவுனியாவில் பேருந்து நிலையத்தில் வைத்து இருவர் கைது!

வவுனியா பேருந்து நிலையத்தில் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று புதன்கிழமை முற்பகல் கிளிநொச்சியிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்தபோது வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் சிங்களவர் எனத் தெரியவந்துள்ளது. ஒருவர் 41 வயதுடைய நிஷாந்த குணரட்ண மற்றவர் 43 வயதுடைய சுமேத ரட்நாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவரும் அநுராதபுரத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்விருவரும் தங்கள் உடையில் 86 கிராம், 68 கிராம் கஞ்சாவை இலைகளை மறைத்து வைத்துள்ளனர்.

இவருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

No comments