மீண்டும் கைது?


2,370 கிலோகிராம் அளவிலான பீடி இலைகளுடன் இந்திய மீனவர்கள் அறுவர் கடற்படையினரால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வைத்தே குறித்த அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை சோதனையிட்ட போது, 2,379 கி.கி அளவிலான பீடி சுற்றும் இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

No comments