சிறைக்கலவரம்! 57 பேர் பலி!

பிரேசில் நாட்டின் பாரா மாநிலத்தின் அல்டமிரா நகரில் நடைபெற்ற  சிறைக் கலவரத்தில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிறையில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் கலவரத்தில் முடிந்தது. கலவரத்தில் 16 பேரின் உடல்கள் தலை துண்டிக்கப்பட்டு சிறையின் சுவர் வழியாக வீசப்பட்டது.

இதேநேரம் மெத்தைகள் எரிக்கப்பட்டதில் வெளியான நச்சு வாயுவை சுவாசித்ததால் 41 பேர் பலியாகியுள்ளனர்.



No comments