அமைச்சர் றிசாத் பதியுதீனின் மனைவியிடம் விசாரணை!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் மனைவியான கிதெர் மொஹமட் சஹாப்தீன் ஆயிசா தொடர்பாக, நிதிமோசடி விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஐந்து கோடியே 50 லட்சம் ரூபாய் நிதிபரிமாற்றம் இடம்பெற்றமை தொடர்பாக இந்த விசாரணை இடம்பெறுவதாக, நிதிமோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்தது.

மத்தியவங்கியின் புலனாய்வுப் பிரிவு வழங்கிய முறைப்பாடு ஒன்றுக்கு அமைய இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.

கொழும்பு 7, பௌத்தலோக மாவத்தையைச் சேர்ந்த குறித்த பெண்ணுக்கு உரிய வங்கி கணக்கிற்கு, தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து ஐந்து கோடியே 50 லட்சம் ரூபாய் பெறுமதியான காசோலை வைப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments